Wednesday, June 10, 2009

சீன வானொலியின் இணையப்பக்கம் தமிழில்

சீன வானோலியின் தமிழ்மொழி இணையப்பக்கம். அதில் அவர்கள் வெறும் வானோலி விசயங்களை மட்டும் தரவில்லை. சீனாவின் செய்திகள், வெளிநாட்டுச்செய்திகள் மற்றும் செய்தி தொகுப்பு ஆகியவைகளை முகப்பில் கொண்டுள்ளது.

இதன் மூலம் சீனப்பார்வையில் உலகத்தினை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டும் வருகிறது.மற்றும் வானோலியின் நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவாக இணைப்பாக கொண்டுள்ளது. ஆனால் என்ன கஷ்டம் அது rm பைல் பார்மட்டில் உள்ளது. ரியல் பிளேயர் இருந்தால் இயக்கிக்கொள்ளலாம். இல்லையேல் ரியல் பிளேயர் கோல்டுற்க்கான பதிவிறக்க இணைப்பு கொடுக்கபட்டுள்ளது அதில் இறக்கிக்கொள்ளலாம்.தமிழ் திரைப்பாடல்களின் தொகுப்பும் அதில் உள்ளது. அவற்றையும் தளமிறக்கிக்கொள்ளலாம்.மேலும் ஒரு முக்கியமான விசயம் சீன மொழியை கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்களூக்கு தமிழ் மூலமாக கற்றுக்கொள்ள அதில் பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பாடங்கள் ஒலிப்பதிவாகவும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இன்பபயணக்கட்டுரைகள், பண்பாடும் கதையும்,சமுக வாழ்வு,அறிவியல் உலகம், சீன தேசிய இன குடும்பம், நல வாழ்வு பாதுகாப்பு, விளையாட்டுச்செய்திகள் எனவும் மற்றும் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் பற்றிய விசயங்களையும் உள்ளடக்கி ஒரு முழு போர்டலாகவே இயங்கி வருகிறது.உண்மையில் சீனத்தைப்பற்றி அறிந்து கொள்ள முழுக்க முழுக்க தமிழிலேயே அமைந்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

சீன வானொலியில் தமிழ்

வட இந்தியாவின் புத்தமதம் சீனா வுடன் வரலாற்று வழிப்பட்ட இணைப்பு களை ஏற்படுத்தியது நன்கு அறியப் பட்டதே. அதுபோன்றே சீனாவுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையிலான உறவுக்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு.தென்னிந்தியாவுக்கும் சீனாவுக் கும் இடையிலான வர்த்தக இணைப்பு கள் மத்திய காலத்திலிருந்து ஏற்பட்டு வந்ததாகும். இதன் பயனாகப் பல தமிழ் கல்வெட்டுகள் - 9வது, 13வது நூற் றாண்டு காலத்தவை - குவான் ஜோ துறைமுகத்தைப் போன்று கடலோர சீனாவின் சில பாகங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.பெரும்பாலோருக்குத் தெரியாத இந்த மத்திய காலத் தொடர்பு நவீன கால வடிவத்தில், அதாவது சிற்றலை வானொலியில் தொடர்கிறது. அரசுக்குச் சொந்தமான சீன ரேடியோ இண்டர் நேஷனல் (சிஆர்ஐ), ஒவ்வொரு நாளும் மாலையில் பெய்ஜிங்கிலுள்ள தனது ஸ்டுடியோவிலிருந்து ஒரு மணிநேரத் தமிழ் ஒலிபரப்பைச் செய்கிறது. இதன் வாயிலாக கடந்த பல ஆண்டுளில், இந்த வானொலி, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின், மிகவும் சிறப்பாக, தமிழ்நாட்டிலேயே தமிழ் பேசும் மக்களிடையில் ஆர்வமிக்க கேட்பாளர்களின் ரசிகர் மன்றங்களைத் தோற்றுவித்துள்ளது.இந்த வானொலி நிலையம் முதல் முதலில் 1941ல் தமிழ் ரசிகர்களுக்கு உலகெங்கும் சீனச் செய்திகளையும் கருத்துகளையும் ஒலிபரப்புவதற்காகத் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த வானொலி நிலையத்தின் தமிழ் பிரிவு, ரசிகர்களிடமிருந்து திகைக்க வைக்கும் மிகப்பெரிய அளவான 5 லட்சத்து 30 ஆயிரம் கடிதங்களைப் பெற்றது. இது சிஆர்ஐயின் 43 மொழி சேவைகள் பெற்ற மொத்தக் கடிதங்களில் சுமார் நான்கில் ஒருபங்கு கடிதங்களாகும். இந்தப் பிரிவின் இயக்குநரான திருமதி ஜூ ஜூவான் ஹூவா, இந்தத் தகவலை ஆழ்ந்த திருப்தியுடன் வெளியிட்டார்.தமிழ்மொழி தனியொரு நாட்டின் தேசிய மொழி அல்ல. அதனால் பிற மொழிப்பிரிவுகள் சில சமயங்களில் அவ்வளவு முக்கியத்துவமுள்ள ஒரு சேவையாகக் கருதுவதில்லை. ஆனால் எங்களது ஒலிபரப்புகளுக்கு மக்களிடம் பெற்ற செல்வாக்கும், ரசிகர்கள் காட்டும் ஆர்வமும் இதற்கு மிக அதிகமாக ஈடு கட்டி விடுகிறது என்றும் அவர் கூறினார்.சிஆர்ஐயின் தமிழ்ப் பிரிவில் 15 சீனர்களும், 2 தமிழர்களும் இருந்து வருகின்றனர். இந்த இரு தமிழ் நிபுணர்களும் சென்னையிலிருந்து வந்தவர்களாவர். இவர்களில் மரியா மைக்கேல் பெய்ஜிங்கில் கடந்த 11 மாதங்களாக இருந்து வருகிறார்.அவருடைய சகா அந்தோணி கிளீட்டஸ் சிஆர்ஐயில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வருகிறார். அவர்களின் முக்கியக் கடமை சீனப் பத்திரிகையாளர்களின் தமிழை செம்மைப்படுத்துவதாகும். அவர்கள் சில நிகழ்ச்சிகளையும் தயாரித்து ஒலிபரப்புவார்கள்.வியக்கத்தக்க மொழித்தூய்மைஇந்தப் பிரிவில் உள்ள சீனர்கள் தூய தமிழில் பேசுவது வியக்கவைக்கிறது என்று கிளீட்டஸ் கூறினார். நாம் பேசும் தமிழில் பிராந்திய மாறுபாடுகள், ஆங் கிலக் கலப்பு முதலியன இருக்கும். ஆனால் இந்த சீனர்கள் பேசும் தமிழ் இலக்கண சுத்தமாக கலப்பற்ற தூய்மை யான தமிழாக இருப்பது நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது, நம்பற்கரியதாக இருக்கிறது என்கிறார் கிளீட்டஸ்.இதனால் சீன நிகழ்ச்சித் தயாரிப் பாளர்கள் தமிழர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கும் கடிதங்களுக்கும் சுமுகமாக சரளமாக பதிலளிக்கின்றனர். சுமார் 300 சிஆர்ஐ தமிழ் சேவை ரசிகர் மன்றங்கள் தமிழ் நாட்டில் உள்ளனவென்றும், அவர்கள் தினமும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு சீன தமிழ் ஒலிபரப்புகளைக் கேட்கின்றனர் என்றும் கிளீட்டஸ் கூறுகிறார்.இந்தியாவிலிருந்து, இந்த சிஆர்ஐ வானொலி நிலையத்துடன் சுமார் 28 ஆயிரம் மக்கள் முறைப்படி பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு டி-சர்ட்டுகள், நிலையத்தின் செய்திக் கடிதம், இதழ்கள் ஆகியவையும் பரிசுகளாக அனுப்பப்படுகின்றன.இயக்குநர் திருமதி ஜூ, தமிழ் ரசிகர்களுக்குக் கலையரசி என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளார். இது போன்றே இரு சீன துணை இயக்குனர்கள் வாணி என்றும் கலைமகள் என்றும் தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டிருக் கிறார்கள்.அண்மையில் ரசிகர்களிடமிருந்து வந்துள்ள தொலைபேசி அழைப்புகளி லும், கடிதங்களிலும் சீனாவில் அண்மை யில் ஏற்பட்ட நிலநடுக்க விவரங்கள், நிவாரணப் பணிகள் பற்றியும் கேட்டு, இந்த சோகநிகழ்ச்சிக்குத் தங்கள் இரங் கலைத் தெரிவித்துக்கொண்டிருக் கிறார்கள்.1962ல் இந்திய-சீன எல்லைத் தகராறு ஏற்பட்டு, அது முடிந்ததற்குப் பின்னரும் இந்த வானொலித் தொடர்பு இடைவிடாமல் தொடர்ந்து வருகிறது.ஆங்கிலப் பட்டப்படிப்புப் பெற்ற இந்தத் துறையின் இயக்குநர் 1975ல் இந்த வானொலியில் சேர்ந்தார். அதன்பின் தமிழ் தெரிந்தவர்களிடம் 20 மாதம் பயிற்சி பெற்றார். பின்னர் தஞ்சாவூருக்கு வந்து ஓராண்டு தமிழ் பயின்றார். இதுவரை ஆறு தடவை இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.சீனத் தகவல் தொடர்பு பல்கலைக் கழகம் தமிழ்நாட்டில் எந்தக் கல்வி நிலையத்துடனும் பங்காளியாகத் தொடர்பு கொள்வதற்கு ஆவலாக உள்ளது.இங்கு தமிழ்த் திரைப்படங்கள் பார்க்கப்படுகின்றன. ரஜினிகாந்த் மிகவும் செல்வாக்குப் பெற்றுள்ள நடிகர். இந்தப் பல்கலைக் கழக மாணவர்களுக்குத் தமிழில் பேச, எழுத, உரையாடக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. சிஆர்ஐயிலிருந்து தமிழ் இதழ்கள் தினமணி போன்றவை வாங்கிப் படிக்கப்படுகின்றன. தமிழ் உச்சரிப்பு கடினமாக இருந்தபோதிலும் மாணவர்கள் சிரமப்பட்டு ஆவலுடன் படிக்கிறார்கள், பேசுகிறார்கள்.